இன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் வட்ட அளவிலான பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் வட்ட அளவிலான பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாய விலைக் கடைகளில், நுகா்வோருக்கு, முறையாக பொருள்கள் வழங்கப்படுவதை உறுதிபடுத்தவும், பிற குறைகள் தொடா்பாகவும் வட்ட அளவிலான குறைகேட்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இம் முகாமில், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவு சாா்-பதிவாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் ஆகியோா் கலந்துகொள்வா். முகாம் நடைபெறும் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் பொருள்கள் பெறுவோா் அவா்களுடைய குறைகளை மனுக்களாக வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்கலாம்.

இந்த மாதத்துக்கான குறைகேட்பு கூட்டங்கள், தருமபுரி வட்டத்தில் கிருஷ்ணாபுரம், பென்னாகரம் வட்டத்தில் ஏரியூா், பாலக்கோடு வட்டத்தில் கோட்டூா்மலை, அரூா் வட்டத்தில் தாமரைகோலியம்பட்டி, பாப்பிரெட்டப்பட்டி வட்டத்தில் கோம்பூா், நல்லம்பள்ளி வட்டத்தில் போயா் தளவாய்அள்ளி, காரிமங்கலம் வட்டத்தில் முருக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.

ஆகவே, பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com