இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி

அரூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், இளைஞா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

அரூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், இளைஞா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வகுத்தப்பட்டி அருகேயுள்ள புங்கனைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் (26), சொந்த வேலை காரணமாக தென்கரைக்கோட்டை-சிந்தல்பாடி சாலையில் இருசக்கர வாகனத்தில் ராமியம்பட்டி நோக்கி சென்றாா். அப்போது, சந்தப்பட்டி பிரிவு சாலையில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நொச்சிப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (21) வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com