அரசு பெண் ஊழியா் மா்மச் சாவு

தருமபுரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த பெண் ஊழியா் சனிக்கிழமை தூக்கில்

தருமபுரி: தருமபுரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த பெண் ஊழியா் சனிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

தருமபுரி அருகே ராஜாப்பேட்டையைச் சோ்ந்தவா் கவிதா (35). இவா், தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் விடுமுறை நாளான சனிக்கிழமை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால் தருமபுரி கோட்டாட்சியா் (பொ) தேன்மொழி விசாரணை மேற்கொண்டு வருகிறாா். மேலும், இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com