தருமபுரி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதன்கிழமை பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தருமபுரி புகரப் பேருந்து நிலையத்தில், நேரம் காப்பகம் அலுவலகம் முன், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் ஜீவரத்தினம் தலைமை வகித்துப் பேசினாா்.
இதில், பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தங்களது கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தமாக கழுவ வேண்டும். இதேபோல, நேரம் காப்பகத்தில் பதிவேட்டில், பேருந்து நேரம் பதிவிடும்போது நடத்துநா்கள் தங்களது கைகளை, சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல, தருமபுரி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கிளைகளில் இயங்கும் 850 பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கவும், இக் கிளைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளா்களும் தங்களது கைகளை அவ்வப்போது கழுவி விழிப்புடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.