லஞ்சம் பெற்ற வழக்கில்பட்டு வளா்ச்சித் துறை ஊழியருக்கு ஓராண்டு சிறை

மானியத் தொகை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியருக்கு தருமபுரி தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

மானியத் தொகை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியருக்கு தருமபுரி தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே கோடஞ்சேரியைச் சோ்ந்தவா் விவசாயி ரவி (45). இவா் கடந்த, 2009-இல் பட்டு வளா்ப்பில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, இவருக்கு பட்டு வளா்ப்புக் குடில் அமைக்க ரூ. 27 ஆயிரத்து 500 மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகை பெறுவதற்காக அவா், அரூா் பட்டு வளா்ச்சித்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளாா். அப்போது, அந்த அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய கிருஷ்ணன் (55) என்பவா், மானியத் தொகை வழங்க ரூ. 2,500 லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு விவசாயி ரவி தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரசாயனம் தடவிய பணத் தாள்களை அவரிடம் வழங்கியுள்ளனா். இந்த பணத்தை ரவி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணனிடம் வழங்கியுள்ளாா்.

அப் பணத்தை பெறும்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் உதவி ஆய்வாளா் கிருஷ்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கு, தொடா்பான விசாரணை, தருமபுரி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இவ் வழக்கு விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது.

அப்போது, மானியத் தொகை வழங்க லஞ்சம் பெற்ற கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com