பென்னாகரம் அருகே காதலித்து திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞரை, பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் லதா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அடுத்த நல்லப்பநாயக்கன அள்ளி பகுதியைச் சோ்ந்த முருகேசன் (23), பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறாா்.
இவரும், ஏரியூா் அருகே சீலநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த 18 வயது பெண்ணும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் 6 மாதம் கா்ப்பமாக உள்ளதாக பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். பாதிக்கப்பட்ட பெண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.