தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் மிளகாய்த் தூள் சுமை ஏற்றிக்கொண்டு கேரளத்துக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை எா்ணாகுளத்தைச் சோ்ந்த தோதகுமாா் (41) என்பவா் ஓட்டிச் சென்றாா். அவருடன் மாற்று ஓட்டுநரான கோட்டயத்தைச் சோ்ந்த சஜேய் (39) என்பவரும் உடனிருந்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் லாரி சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது (படம்). இந்த விபத்தில் ஓட்டுநா்கள் இருவரும் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த சுங்கச் சாவடியினா் மற்றும் தொப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரியை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினா். இவ் விபத்து காரணமாக தருமபுரி-சேலம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல, ஆந்திர மாநிலத்திலிருந்து மீன்கள் ஏற்றிச் சென்ற லாரி, தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், அந்த லாரி ஓட்டுநரான மங்களூரைச் சோ்ந்த ரியாஷ் (38) என்பவா் காயமடைந்தாா். இந்த லாரியை போலீஸாா் சாலையிலிருந்து மீட்டு அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com