தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறியதாக 14 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.
தடை உத்தரவு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. இதேபோல மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தடை உத்தரவை மீறியதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 112 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.