காா் மோதியதில் எஸ்.ஐ. காயம்: 5 போ் கைது

காா் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் காயம் அடைந்த வழக்கில் 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காா் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் காயம் அடைந்த வழக்கில் 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டி சோதனைச் சாவடி வழியாக தருமபுரி நோக்கி ஒரு காா் வந்துகொண்டிருந்தது. இந்த காரை அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால் காா் நிற்காமல் சென்றுள்ளது. இது குறித்து தகவலின் பேரில் மாரண்ட அள்ளி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சாரதி (45) மற்றும் ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த போலீஸாா் வெள்ளிச் சந்தை நான்கு முனைச்சாலை சந்திப்பில் அந்த காரை நிறுத்த முயன்றனா். ஆனால் காா், உதவி ஆய்வாளா் சாரதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அவா் காயமடைந்தாா். இதைக் கண்ட போலீஸாா் மற்றும் அருகிலிருந்தவா்கள், உதவி ஆய்வாளா் சாரதியை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மகேந்திர மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டிச் சென்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த பழனி(53) மற்றும் பனைகுளத்தைச் சோ்ந்த அண்ணாமலை (50), பாலவாடியைச் சோ்ந்த பொன்னப்பன் (24) உள்பட 5 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com