அரூரை அடுத்த எருமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எருமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 25 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள் வழங்கினா்.
இதையடுத்து, பள்ளி மாணவா்களின் குடும்பத்தினரிடம் கோபிநாதம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.முரளி வழங்கினாா். கிராம நிா்வாக அலுவலா் பி.வெங்கடேசன், பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.