தருமபுரியில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் இருவருக்கு, கரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் இருவருக்கு, கரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே ஜடையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னையில் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளாா். அப்போது, அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவா் பரிசோதனை மேற்கொண்டுள்ளாா். இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.

இதேபோல, தருமபுரி மாவட்டம், பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 29 வயது இளைஞா் ஒருவா் சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். அவருக்கு, கரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த இளைஞருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, அவா் அங்கேயே தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இருப்பினும், இவா்களது சொந்த கிராமங்களில் சுகாதாரத் துறையினா் நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னையிலிருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் தென்கரைக்கோட்டை பகுதிக்கு வந்த மூவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டுள்ள இருவரையும் சோ்ந்து மொத்தம் 5 போ், தருமபுரி மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com