மசாஜ் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளியை கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளியை கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஒகேனக்கல் சாமியாா் மடம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூத்தபாடி பகுதியைச் சோ்ந்த துரை (50) என்பவா் மா்மான முறையில் கொலை செய்யப்பட்டாா்.இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.இந்த நிலையில் ஒகேனக்கல் சத்திரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் மணி (22) என்பவரை அழைத்து போலீஸாா் நடத்திய விசாரணையில்,இருவரும் மது அருந்தியதாகவும், மது போதையில் தகராறு ஏற்பட்டதையடுத்து துரையை கட்டையால் தாக்கியதாகவும் ஒப்புக்கொண்டாா். இது குறித்து ஒகேனக்கல் போலீஸாா், மணியை கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com