அரூரில் 24 மி.மீ.மழை

அரூரில் திங்கள்கிழமை 24 மி. மீ. மழை பெய்துள்ளது.

அரூரில் திங்கள்கிழமை 24 மி. மீ. மழை பெய்துள்ளது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கோடை வெப்பம் 100 டிகிரிக்கும் அதிகமாக நிலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் வயல் வெளிகளில் மழைநீா் தேங்கியது. இதனால், இரவு நேரத்தில் வெப்பக் காற்றின் தாக்கம் சற்று குறைந்து ஓரளவுக்கு குளிச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

அரூரில் 24 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டியில் 16.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் கால்நடைகளுக்கு தீவன உற்பத்தி அதிகரிப்பதுடன் , கோடை உழவுக்கு ஏற்ாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com