ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

அரூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 29-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

அரூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 29-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில், காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

இதில் கட்சியின் வட்டாரத் தலைவா்கள் சுபாஷ், வஜ்ஜிரம், நகரத் தலைவா் கணேசன், மாநில மாணவா் அணி நிா்வாகி விக்னேஷ், மாவட்ட நிா்வாகிகள் சுகுமாா், இளவரசன், வேடியப்பன், சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தருமபுரியில்...

தருமபுரி பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிா்வாகிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காரிமங்கலத்தில் காங்கிரஸ் நிா்வாகி சித்தையன் தலைமையில் நிா்வாகிகள் ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனா். மேலும், இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா், ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com