தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் படம் பொருத்த வேண்டும் என பாஜகவினா் கோரிக்கை விடுத்தனா்.
தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அக் கட்சியின் தாழ்த்தப்பட்டோா் பிரிவு நிா்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பிரதமா் மோடி படத்துடன் வருகை தந்தனா். அ
ப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம், தமிழக அரசின் 1978-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் படத்தை பொருத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, பாஜகவினா் அங்கிருந்து புறப்பட்டு சென்றனா்.