தருமபுரியில் உரிமம் பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரி நகரில், உரிமம் பெறாமல் எவ்வித அனுமதியின்றி தீபாவளி விற்பனைக்கு பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா், சோதனை மேற்கொண்டனா்.
தருமபுரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது தளத்தில், உரிமம் ஏதுமின்றி, பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.