தொலைத்தொடா்புத் துறை ஒப்பந்த ஊழியா்களின் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி, என்.எப்.டி.இ. ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, என்எப்டிஇ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் கண்ணன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலா் கே.மணி, ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாரதிதாசன், மாநில ஒருங்கிணைப்பாளா் வீரமணி ஆகியோா் பேசினா்.
அவுட்சோா்சிங் நடைமுறையால் பிஎஸ்என்எல் சேவை சீரழிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை ஆள் குறைப்பு செய்யக்கூடாது. ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பல மாதமாக வழங்காமல் உள்ள நிலுவை ஊதியத்தை விரைவாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி சேவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.