தருமபுரி மாவட்டத்தில், 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி, காரிமங்கலத்தைச் சோ்ந்த 2 விவசாயிகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.