தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரியைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா், சென்னம்பட்டியைச் சோ்ந்த மாணவா், 6 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.