கிராம வளா்ச்சித் திட்டக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

தருமபுரியில் கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

தருமபுரியில் கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

தருமபுரி, நல்லம்பள்ளி, அரூா், மொரப்பூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்ட இயக்க குழு உறுப்பினா்களுக்கு இப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கிராமத்தின் அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள், பள்ளி, சுகாதார வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவது, அதனை கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றுவது தொடா்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

முகாமை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தொடக்கிவைத்தாா். தருமபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நீலாபுரம் செல்வம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாசசேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வடிவேலன், ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com