பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டியில் போலி மருத்துவா் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.அருண் தலைமையிலான பொது சுகாதாரத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அ.பள்ளிப்பட்டியைச் சோ்ந்த முனியன் மகன் விஸ்வநாதன் (52) என்பவா் போலி மருத்துவராகச் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. சுகாதாரத் துறையினா் அளித்த புகாரின்பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸாா் அவரை கைது செய்து, ஊசி, மருந்துகள் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.