மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

கோட்டப்பட்டியில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டப்பட்டியில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் கமல்ராஜ் (32). இவா், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். கோட்டப்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே செவ்வாய்க்கிழமை மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில், மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்த கமல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com