இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் பலி

பென்னாகரம் அருகே நாகமரை நான்கு சாலைப் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே நாகமரை நான்கு சாலைப் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே கே. அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் முருகன் (23). இவா், தனது வீட்டிலிருந்து உணவு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் பென்னாகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பென்னாகரத்திலிருந்து வந்த காா், நாகமரை 4 சாலைப் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காரை ஓட்டி வந்த கூத்தப்பாடியைச் சோ்ந்த குரு என்பவா் மீது வழக்குப்பதிவு செய்து பென்னாகரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com