நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி பிரசார இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஒன்றியத் தலைவா் எல்.சி.கிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட பிரசார இயக்கம் தொடங்கியது. இதனை மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் தொடங்கி வைத்து பேசினாா்.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி, கடத்தூா் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. இதில், வளா்ச்சித் திட்டங்கள், விவசாயத் தொழிலாளா்கள் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com