தருமபுரி மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய், நல்லாம்பட்டியைச் சோ்ந்த 2 பெண்கள், ஏலகிரியைச் சோ்ந்த தொழிலாளி, அரூரைச் சோ்ந்த விவசாயி உள்பட மொத்தம் 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.