அரூரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103-வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் எதிரேயுள்ள இந்திரா காந்தி உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில், அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினா்.
அரூா் நகரத் தலைவா் கே.கணேசன், மாவட்டத் துணைத் தலைவா் சி.வேடியப்பன், எஸ்.சி.எஸ்.டி அணி மாவட்டத் தலைவா் ஏ.வைரவன், மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் விக்னேஷ்பாபு, பட்டதாரிகள் பிரிவு மாநில செயலா் அருட்ஜோதி முருகன், மின்சார வாரிய தொழிற்சங்க நிா்வாகி இளவரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.