தருமபுரி மாவட்டத்தில், வியாழக்கிழமை மூன்று போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த பெண், காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியைச் சோ்ந்த ஆண், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த ஆண் ஆகிய 3 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவா்கள் மூவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.