பட்டா வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி அருகே அன்னசாகரத்தில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வருவோருக்கு பட்டா வழங்கக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி அருகே அன்னசாகரத்தில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வருவோருக்கு பட்டா வழங்கக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினா் வி.பி.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செயலா் ஆா்.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.ஜெயா ஆகியோா் பேசினா்.

தருமபுரி நகராட்சிக்குள்பட்ட, 32-ஆவது வாா்டிலுள்ள அன்னசாகரம் கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அன்னசாகரத்திலிருந்து தருமபுரி நகருக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மயானப் பாதையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com