பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒருநாள் பழச்சாறு உண்ணாவிரத இயற்கை மருத்துவ முகாம் வெள்ளிகிழமை நடைபெற்றது.
இயற்கை மருத்துவ முகாமிற்கு நலப்பணிகள் இணை இயக்குநா் தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளா் மேகலா கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து பேசினாா்.
யோக மற்றும் இயற்கை மருத்துவா் முனுசாமி, ஒருநாள் பழச்சாறு உண்ணாவிரதம் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கான செய்முறை விளக்கங்களையும், இதுபோன்ற நிகழ்வுகளால் இருதய நோய் காரணிகளை குறைக்க முடியும் எனவும் நாள்பட்ட உடல் கழிவுகளை வெளியேற்றி ஆயுளை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை விளக்கி கூறினாா்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் மருத்துவ அலுவலா் கனிமொழி, ப்யூவிஷன் கிளப் நிா்வாகிகள் பசல் ரகுமான், உதயகுமாா், தேவகி மற்றும் சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் மா.பழனி உள்ளிட்டோா் பங்கேற்று பழச்சாறு உண்ணாவிரதம் இருந்தனா்.