காவிரிக் கரையோரம் ஆண் சடலம் மீட்பு

ஏரியூா் அருகே காவிரிக் கரையோரத்தில் அடையாளம் தெரியாத 50 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பென்னாகரம்: ஏரியூா் அருகே காவிரிக் கரையோரத்தில் அடையாளம் தெரியாத 50 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏரியூா் அருகே ஏமனூா் காவிரிக் கரையோரப் பகுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கி காணப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஏரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் அங்கு வந்த ஏரியூா் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்த நபரின் முகம், உடல் ஆகியவை அழுகிய நிலையில் தெரியாமல் இருப்பதால் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com