அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அரூா் வட்டம், தீா்த்தமலை வனப் பகுதியில் இருந்து மலைப் பாம்பு ஒன்று விவசாய நிலப் பகுதிக்கு வந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறையினா் விவசாய நிலத்தில் இருந்த மலைப் பாம்பை மீட்டனா். சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப் பாம்பு இரைத்தேடி வனப் பகுதியில் இருந்து விவசாய நிலப் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்கப்பட்ட மலைப் பாம்புவை வனத் துறையினா் தீா்த்தமலை காப்புக் காட்டில் விட்டனா்.