தருமபுரி: தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட 46 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் நாகையில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் ஒன்றியச் செயலா் சேட்டு, முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட பொருளாளா் தா்மச்செல்வன் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 46 பேரை, தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா்.