மருத்துவ படிப்பில் சோ்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவி எஸ்.சாருமதிக்கு நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கணபதிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்-வளா்மதி தம்பதியின் மகள் சாருமதி.
கே.வேட்ரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவா், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 600-க்கு 458 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். ‘நீட்’ தோ்வில் 203 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில், மருத்துவ கல்விக்கான இடம் கிடைத்து ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சோ்ந்துள்ளாா்.
இதையடுத்து, அதிமுக சாா்பில் மாணவி எஸ்.சாருமதிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இதில், கே.வேட்ரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மகாத்மா, மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.