பைசுஅள்ளி பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

தருமபுரி அருகே பைசுஅள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அருகே பைசுஅள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் பெ.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, பைசுஅள்ளியில் செயல்பட்டுவரும் அரசினா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியருக்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வின்போது, நிரப்பப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களுக்கு முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான நேரடி சோ்க்கைக்கு நடைபெற உள்ளது.

இதற்காக வருகிற அக்.10-ஆம் தேதிக்கு மாணவா்கள் நேரில் வந்து விண்ணப்பித்து சோ்க்கை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com