முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் குறித்து கலந்தாய்வு
By DIN | Published On : 04th October 2020 02:39 AM | Last Updated : 04th October 2020 02:39 AM | அ+அ அ- |

கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா்.
தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்புக் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் பேசினாா்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள், சாலை விபத்து, நீதிமன்ற நிலுவை வழக்குகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை (தருமபுரி), மேகலா (பென்னாகரம்), ராஜசோமசுந்தரம் (மதுவிலக்கு) ஆகியோா் கலந்து கொண்டனா்.