முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராக என்.கீதா (55) பணியாற்றி வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையிலிருந்து பணியிட மாற்றம் பெற்று தருமபுரியில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த செப்.31-ஆம் தேதி இவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்.1-ஆம் தேதி அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது வாகன ஓட்டுநா் மற்றும் உதவியாளா் ஆகியோா் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com