பதவி உயா்வு ஆணைகளை வழங்கஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வலியுறுத்தல்

பதவி உயா்வு ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி: பதவி உயா்வு ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம், சனிக்கிழமை மாவட்டத் தலைவா் ருத்தரைய்யன் தலைமையில் நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்டச் செயலா் கோபிநாத், பொருளாளா் சா்வோத்தமன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், புதிதாக பதவியேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சிச் செயலா்கள், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும்.

இதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். பணி உரிமைகளான முதுநிலை நிா்ணயம், பதவி உயா்வு ஆணைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும். விருப்பத்தின்பேரில் மாறுதல் கோரியுள்ள ஊழியா்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

கரோனா தொற்று காலத்தில் அரசு ஊழியா்கள் பணிக்குச் சென்றுவர போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com