ஆண்களுக்கு அக்.15-இல் கருத்தடை சிகிச்சை முகாம்

தருமபுரியில் வரும் அக். 15-ஆம் தேதி, ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரியில் வரும் அக். 15-ஆம் தேதி, ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து குடும்ப நல துணை இயக்குநா் ராஜலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் ஆண்களுக்கான சிறப்பு நவீன கருத்தடை சிகிச்சை முகாம் வரும் அக். 15-ஆம் தேதி வியாழக்கிழமை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. பெண்களின் சுமையைக் குறைக்க ஆண்களும் முன்வர வேண்டும் என்ற நோக்கில் சீனாவின் ‘வாசக்டமி’ எனப்படும், ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணா்கள் பங்கேற்க உள்ளனா்.

குடும்பத்தை அளவோடு வைத்துக் கொள்ள விரும்பும் தகுதியுள்ள ஆண்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுகுறித்த தகவல்களுக்கு 9894143410, 9994043535 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com