தருமபுரி மாவட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலா் உள்பட 59 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலா், தருமபுரி, பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த 2 மாணவா்கள், 7 பெண்கள் உள்பட மொத்தம் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ேஅனுமதிக்கப்பட்டனா்.