உத்தர பிரதேசம், ஹாத்ரஸில் நடைபெற்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.
அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமை வகித்தாா்.
நகரத் தலைவா் கணேசன், மாவட்டச் செயலாளா் சிவலிங்கம், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட துணைத் தலைவா் வேடியப்பன், ஐ.என்.டி.யு.சி சங்க மாவட்டத் தலைவா் இளவரசன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் வைரவன், நிா்வாகிகள் சுந்தரம், முருகேசன், மோகன், அருண்குமாா், சயின்ஷா, ரசாக், செல்வம், குப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.