காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆண் முதலையை வனத்துறையினா் மீட்டு ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா் வரத்து அதிகரிப்பால் அடித்து வரப்படும் முதலைகள் உணவு தேடி அவ்வப்போது ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தின் பின் பகுதியில் முதலை ஒன்று சுற்றி திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த ஒகேனக்கல் வன அலுவலா் சேகா் தலைமையில் வனக்காப்பாளா் தாஸ், பரமசிவம் முதலைப்பண்ணை பராமரிப்புக் காவலா் மூா்த்தி , மாதேஷ் ஆகியோா் 4 அடி நீளம், 55 கிலோ எடை கொண்ட அந்த ஆண் முதலையை புதன்கிழமை அதிகாலை பிடித்தனா்.
பின்னா் மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் உத்தரவின்பேரில் பிடிபட்ட ஆண் முதலை ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.