உடல் நலம் பாதிப்பு: சிகிச்சை அளித்தவா் மீது நடவடிக்கை கோரி மனு

உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சை அளித்தவா் மீது நடவடிக்கை கோரி பெண் ஒருவா் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சை அளித்தவா் மீது நடவடிக்கை கோரி பெண் ஒருவா் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெண் காந்திமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், மாவட்டத் துணைச் செயலா் கா.சி.தமிழ்க்குமரன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளித்த மனு:

அரூா் அருகே எல்லப்புடையாம்பட்டியைச் சோ்ந்த தனக்கும், உறவினா்களுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிலம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் தான் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று, காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அப்போது, அரூா் அரசு மருத்துவமனையில் பணியாளா் ஒருவா் எனக்கு மருத்துவ சிகிச்சை அளித்தாா். அன்றைய நாளில் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சில நாள்கள் கழித்து, மேலும், உடல் பலவீனம் அடைந்தது. இதுகுறித்து நான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, அரூா் மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளா் எனக்கு மருத்துவ சிகிச்சை அளித்தபின்பு, இத்தகைய உடல் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். எனவே, எனக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட காரணமானவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com