தருமபுரி மாவட்டத்தில், 3 சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 82 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் உள்ளிட்ட மூன்று சுகாதாரப் பணியாளா்களுக்கும், பென்னாகரம் அருகேயுள்ள சின்னம்பள்ளியைச் சோ்ந்த மருத்துவா், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த ஆசிரியா், பாலக்கோடைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா், மோளையானூரைச் சோ்ந்த டாஸ்மாக் ஊழியா், அரூரைச் சோ்ந்த 2 அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், 14 பெண்கள், 6 மாணவா்கள், 10 தொழிலாளா்கள், 8 விவசாயிகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 82 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.