அண்ணா பல்கலை. துணைவேந்தரை பதவி நீக்கக் கோரி திமுக இளைஞரணியினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, திமுக இளைஞரணி, மாணவரணியினா் வியாழக்கிழமை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, திமுக இளைஞரணி, மாணவரணியினா் வியாழக்கிழமை தருமபுரி செட்டிக்கரையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி நுழைவாயில் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞரணி மாவட்டப் பொறுப்பாளா் சந்திரமோகன், மாணவரணி மாவட்ட அமைப்பாளா் அன்பழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் பிஎன்பி இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் ஆகியோா் பேசினா்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா் சிறப்புத் தகுதி அளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாநில அரசின் நிதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவாா்க்கும் செயலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திமுக மாவட்டப் பொருளாளா் தா்மச்செல்வன், ஒன்றியச் செயலா்கள் சேட்டு, எச்சனஅள்ளி சண்முகம் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com