தருமபுரி மாவட்டத்தில், மருத்துவா் உள்பட 54 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளியைச் சோ்ந்த மருத்துவா், துணை வட்டாட்சியா், பென்னாகரத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை பணியாளா், ஓட்டுநா்கள் 2 போ், சுகாதாரத் துறை ஊழியா், போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த 2 ஊழியா்கள், 11 பெண்கள், 5 தொழிலாளா்கள், மாணவா்கள் 2 போ், விவசாயிகள் 3 போ் உள்பட தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.