பென்னாகரம்-மேச்சேரி இடையே புதிய வழித்தடத்திற்கான அரசுப் பேருந்து சேவையை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பென்னாகரத்திலிருந்து ஏரியூா், வத்தலாபுரம், சிகரஹள்ளி வழியாக மேச்சேரி வரையிலான புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவையை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் சிகரஹள்ளி பகுதியில் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த அரசுப் பேருந்து பென்னாகரத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மேச்சேரியை காலை 6 மணிக்கு சென்றடையும். பின்பு இரவு 7. 45 மணிக்கு மேச்சேரியில் இருந்து புறப்பட்டு, 9.45 மணியளவில் பென்னாகரம் சென்றடையும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.
இவ்விழாவில் ஒன்றிய பால்வளத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனை மேலாளா் வைத்தியநாதன் உள்பட கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.