அரூரில் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் பாரத ஸ்டேட் வங்கி தற்காலிகமாக வியாழக்கிழமை மூடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் பாரத ஸ்டேட் வங்கியின் 55 வயது கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அரூா் பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை மூடப்பட்டது. அரூா் பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகள் தற்காலிகமாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியனஹள்ளி பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.