அரூா் முருகன் கோயில் தெருவில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட முருகன் கோயில் தெருவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இத் தெருவில் 20-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இப் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். எனவே, மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட முருகன் கோயில் தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.