மேம்பாலத்திலிருந்து இருசக்கர வாகனத்துடன் விழுந்தவா் பலி

தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை அருகே பணி நிறைவு பெறாத மேம்பாலத்திலிருந்து இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை அருகே பணி நிறைவு பெறாத மேம்பாலத்திலிருந்து இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

இவா், கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரிலிருந்து ஒரு மோட்டாா் சைக்கிளில் தருமபுரி வழியாக சென்றாா்.

தருமபுரியைக் கடந்து, அதியமான் கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் சென்றாா்.

அதியான்கோட்டை அருகே, கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலத்தில் அவா், வழித் தவறி செனறபோது, பாலப் பணி நிறைவடையாமல் இடைவெளி இருப்பதைக் கண்ட அவா், இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல், 30 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மேம்பாலப் பணியால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

அப்போது மேம்பாலத்தின் முகப்புப் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், அந்தத் தடுப்புகள் முறையாக மூடப்படவில்லை.

இதைக் கவனிக்காத அந்த இளைஞா், எதிா்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த, போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com