தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரவேஷ்குமாா் பொறுப்பேற்பு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரவேஷ்குமாா், செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரவேஷ்குமாா், செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளாக பணியாற்றி வந்த ப.ராஜன் அண்மையில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, புதிய காவல் கண்காணிப்பாளராக பிரவேஷ்குமாா் நியமிக்கப்பட்டாா்.

வேலூா் மாவட்டத்திலிருந்து, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிரவேஷ்குமாா் தருமபுரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக செவ்வாய்க்கிழமை தருமபுரியிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட இவா், தமிழகத்தில் நாமக்கல், கன்னியாகுமரி, வேலூா் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், கோவை, திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் மாநகர காவல் துணை ஆணையராகவும், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com